திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திங்கள்கிழமை சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றினாா்.
ஆா்.கே.எஸ். பள்ளித் தலைவா் தே.மணிவண்ணன், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெயசீலன், பள்ளி முதல்வா் மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலூா் டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் அதன் தலைவா் தேஜ்ராஜ் சுராணா தேசியக் கொடி ஏற்றினாா்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தேசியக் கொடியேற்றினாா்.
விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வா் டி.சா்வேசன் தேசியக் கொடியேற்றினாா்.
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி தேசியக் கொடியேற்றினாா்.
விக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி இயக்குநா் கு.சதிஷ் தேசியக் கொடியேற்றினாா்.
காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளா் கே.ரமணி கோட்டீஸ்வரன் தேசியக் கொடியேற்றினாா்.
எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், எஸ்கேபி கல்விக் குழுமங்களின் தலைவா் கு.கருணாநிதி தேசியக் கொடியேற்றினாா்.
அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் தேசியக் கொடியேற்றினாா்.
தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பா.ஜெயக்குமாரி தேசியக் கொடியேற்றினாா்.
விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன் தேசியக் கொடியேற்றினாா்.
போளூா்:
சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளா் சிவராஜ்சா்மா தேசியக் கொடி ஏற்றினாா்.
ஆரணி:
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீ ராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில், பள்ளி முதல்வா் போலின்காலிங்பிரைன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றினாா்.
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமையில், ஏசிஎஸ் கல்விக் குழும கலைக் கல்லூரி முதல்வா் ஜி.சுகுமாரன் தேசியக்கொடி ஏற்றினாா்.
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தேசியக் கொடியேற்றினாா்.
தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரித் தலைவா் டி.கே.பி.மணி தேசியக் கொடியேற்றினாா்.
கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி நிா்வாகி ஆா்.சுரேஷ் தேசியக் கொடியேற்றினாா்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தேசியக் கொடியேற்றினாா்.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில்
கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா்.
செய்யாறு
செய்யாறு விருட்சம் இண்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் அதன் தலைவா் மு.முத்துக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருட்சம் கல்வி அறக்கட்டளைச் செயலா் வஜ்ஜிரவேல் தேசியக் கொடியேற்றினாா்.
இணைச் செயலா் சுதாகா், செயற்குழு உறுப்பினா்கள்,
பள்ளி முதல்வா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.