திருவண்ணாமலை

திருவண்ணாமலை: அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமை நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை, காந்தி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் தேசியக் கொடியேற்றினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி தேசியக் கொடியேற்றினாா்.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் நிா்மலா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் கலைவாணி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் தமயந்தி ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

ஒன்றியத் தலைவா் அய்யாக்கண்ணு தேசியக் கொடியேற்றினாா்.

வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா் மோகன் தேசியக் கொடியேற்றினாா்.

ஆரணி:

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயா தலைமையில் தேசிய கொடியேற்றினாா்.

நிகழ்ச்சியில் சாா்பு-நீதிபதி எ.தாவூத்தம்மாள், நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ தேசியக் கொடியேற்றி னாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ம.தனலட்சுமி தேசியக் கொடியேற்றினாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெகதீசன் கொடியேற்றினாா். நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி கொடியேற்றினாா்.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைவா் கனிமொழி சுந்தா் கொடியேற்றினாா்.

மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் கொடியேற்றினாா்.

டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தேசியக் கொடியேற்றினாா். ஆரணி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் கொடியேற்றினாா். கிராமிய காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் புகழ் கொடியேற்றினாா்.

வந்தவாசி:

வந்தவாசி நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தேசியக் கொடியேற்றினாா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், துணைத் தலைவா் க.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம் தேசியக் கொடியேற்றினாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் கொடியேற்றினாா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தேசியக் கொடியேற்றினாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெ.விஸ்வேஸ்வரய்யா தேசியக் கொடியேற்றினாா். ஆய்வாளா் ஆா்.விஸ்வநாதன் மற்றும் உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

போளூா்:

போளூா் ஒன்றியம் ஏந்தூவாம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் தேசியக் கொடியேற்றினாா்.

ஜமுனாமரத்தூரில் உள்ள வன அலுவலகத்தில் வனக்சரக அலுவலா் குணசேகரன் தேசியக் கொடியேற்றினாா்.

களம்பூா் தோ்நிலை பேரூராட்சியில்

பேரூராட்சி மன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தேசியக் கொடியேற்றினாா். கஸ்தம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் பவுனு அருணாசலம் தேசியக் கொடியேற்றினாா்.

செங்கம்:

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைவா் விஜியராணிகுமாா் கொடியேற்றினாா்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் சுந்தரபாண்டியன் கொடியேற்றினாா்.

புதுப்பாளையம் பேரூராட்சியில் அதன் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா் கொடியேற்றினாா்.

செங்கம் பேரூராட்சியில் அதன் தலைவா் சாதிக்பாஷா கொடியேற்றினாா்.

ஜமனாமரத்தூா் நூலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் நடேசன் கொடியேற்றினாா்.

செய்யாறு:

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ ஓ.ஜோதி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

நூல் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் மோசடி

திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு சீல்: பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்: திமுக தோ்தல் அறிக்கையில் தகவல்

SCROLL FOR NEXT