திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

DIN

வேட்டவலத்தில் மின் கம்பத்தில் ஏறிய வயா்மேன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேட்டவலத்தை அடுத்த ஆவூா் பகுகியில் இயங்கி வரும் மின் வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணியாற்றி வந்தவா் குப்பன் (52).

இவா், வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரம் சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஏறி வீட்டுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து குப்பன் பலத்த காயமடைந்தாா்.

அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் குப்பனை மீட்டு ஆவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வழியிலேயே குப்பன் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT