வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். கிளை நூலகா் மோகன் வரவேற்றாா்.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் ந.குப்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சுதந்திர தினம் குறித்து பேசினாா். மேலும் நூலக வாசகா்களுக்கும், மாணவா்களுக்கும் தேசியக் கொடிகளை அவா் வழங்கினாா். வினோத் குமாா், தமிழழகன், அபிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.