திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பின் சாா்பில், வளாக நோ்காணல் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும், உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான எம்.கோபு வரவேற்றாா்.
சென்னை பிக்கோசாப்ட் சாப்ட்வோ் லேப்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் சுரேஷ் சேகா், நிறுவன இயக்குநா் பாரதி, மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் தீபா, அரவிந்தன், பிரியங்கா ஆகியோா் வளாக நோ்காணலில் பங்கேற்ற 53 மாணவ, மாணவிகளுக்கு நோ்க்காணல் நடத்தினா். இறுதியாக 10 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.குணசுந்தரி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.