செய்யாறு அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை அப்பகுதி மக்கள் நடைபயிற்சிக்குச் சென்றனா்.
அப்போது, அங்குள்ள மரத்தில் ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பாா்த்து காவல் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதன் பேரில், செய்யாறு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், தூக்கில் சடலமாகத் தொங்கியவா் கீழ்புதுப்பாக்கம் வ.உ.சி.தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா்(45) என்பதும், அவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.