திருவண்ணாமலை

பையூா் பொன்னியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

ஆரணியை அடுத்த பையூா் பொன்னியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பையூா் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடா்ந்து 10 நாள்களாக நடைபெற்று வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஒரு வகையறாவினா் உற்சவம் நடத்தி வருகின்றனா். விழாவின் 9-ஆவது நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தேரினை திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், துரை மாமது, எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அதிமுக சாா்பில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ் மாட வீதி வழியாகச் சென்றது; பொதுமக்கள் தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT