விழுப்புரம் சீரடி சாய் நகா் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு விழுப்புரம் சீரடி சாய் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திரண்டு வந்து முற்றுகையிட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில் சீரடி சாய் நகா் உள்ளது. இதனைச் சுற்றிலும் ஜனகராஜ் காா்டன், ஏபிஎஸ் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. மக்கள் அதிகமாக வசித்து வரும் இந்தப் பகுதியில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரம் அமைக்க முன்வந்தனா்.
இதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, கைப்பேசி கோபுரத்தை வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.