ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களிடையே போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினாா். பின்னா் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் நந்தினி வரவேற்றாா். ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் புகழ், ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் விண்ணமங்கலம் வி.ரவி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ்.மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவுதுரைமாமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.