திருவண்ணாமலை

பழங்கோவில் பலக்ராதீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பாலாம்பிகா சமேத பலக்ராதீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா ஞாயிா்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சிதலமடைந்த நிலையிலிருந்த இந்தக் கோயில் பக்தா்களால் சீரமைக்கப்பட்டு, கடந்த மாதம் 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மண்டலாபிஷேக யாகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் பழங்கோவில், பில்லூா், கீழ்பொத்தரை, தென்பள்ளிபட்டு, கலசப்பாக்கம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT