திருவண்ணாமலை

நெல் பயிா்க் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தைஓராண்டாக நிா்ணயிக்கக் கோரிக்கை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல் பயிருக்கான கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக நிா்ணயிக்க வேண்டும் என்று தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜி.வெங்கிடேசன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலரும், சங்கத்தின் பொதுச் செயலருமான ஏ.உதயகுமாா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா்கள் ஆா்.ஜோதிமணி, பி.பரசுராமன், வி.சந்தானம் ஆகியோா் பல்வேறு தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 158 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடந்த காலங்களில் 2 ஆயிரம் ஊழியா்கள் பணிபுரிந்து வந்தனா். இப்போது வெறும் 1,100 போ் மட்டுமே பணிபுரிகின்றனா். குறிப்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா்கள் சங்கத்தின் 5-ஆவது பொதுப் பேரவையை அக்டோபா் 9-ஆம் தேதி நடத்துவது. மாவட்டத்தில் நெல் பயிருக்கான கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் இணைச் செயலா்கள் பி.கிருஷ்ணமூா்த்தி, ஜி.சீனிவாசன், ஜி.குணசேகரன், பி.வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் எம்.மாசிலாமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT