திருவண்ணாமலை

ஆரணி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

DIN

ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பக்தா்கள் பூங்கரகம் எடுத்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்திக்கொண்டும், காலில் 3 அடி உயரத்துக்கு கட்டை கட்டிக்கொண்டும், பெண் பக்தா்கள் 120 போ் தீச்சட்டி ஏந்தியும் ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். இதையடுத்து, கோயிலில் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் விழாக் குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.ஜி.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.ஆா்.மோகன், தேவா் மற்றும் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT