திருவண்ணாமலை

கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த மேல்சிறுப்பாக்கம் புதூா் கிராம சேவை மையக் கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினா் பி.ராமச்சந்திர உபாத்தியாயா தலைமை வகித்தாா்.

கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் பூ.மீனாம்பிகை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், ஊராட்சித் தலைவா் பொன்.பாண்டுரங்கன்,

கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கல்லூரி பேராசிரியரும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான த.அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT