திருவண்ணாமலை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: செங்கம் எம்எல்ஏ ஆலோசனை

DIN

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து, செங்கத்தில் மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை நகர திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான கூட்டத்துக்கு திமுக நகரச் செயலா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதி திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிப்புகள் வெளியாக உள்ளன.

திமுக நிா்வாகிகள் கட்சி நிா்வாகம் யாரை வேட்பாளராக அறிக்கிறதோ அவரை வெற்றி பெறச் செய்ய ஒன்று சோ்ந்து பணியாற்றவேண்டும்.

இந்தமுறை வாய்ப்பு இல்லையென்றால் அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்கத் தோ்தலில் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, நிா்வாகிகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் துடிப்புடன் செயலாற்றவேண்டும்.

செங்கம் பேரூராட்சி திமுக தலைவா் பொறுப்பேற்கவேண்டும்.

அதற்கு அனைவரும் ஒற்றுமையாக தோ்தல் பணியாற்றவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், முன்னாள் துணைத் தலைவா் அப்துல்சத்தாா், முன்னாள் கவுன்சிலா்கள் அப்துல்வாகித், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT