திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக க.சக்கரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியராக இருந்த அவா், பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா். புதிய வட்டாட்சியா் க.சக்கரைக்கு தலைமையிட துணை வட்டாட்சியா் வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் கவுரி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் லட்சுமணப்பெருமாள், கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் சுதா மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
இதுவரை கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக இருந்த வைதேகி, செய்யாறு தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.