திருவண்ணாமலை

பள்ளி மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள்

DIN

திருவண்ணாமலையில் விஜயதசமி விழாவையொட்டி, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாயிகங்கா இலவசக் குடிநீா் வழங்கும் மையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சாயிகங்கா குடிநீா் மைய நிறுவனா் ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பலராமன், நூலகா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து, தேசிய சிந்தனையாளா் ஐயப்பன், மாவட்ட தமிழ்க் கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். விழாவில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதுகோல், குறிப்புச் சுவடி, பலகை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT