ஆரணி காஜிவாடை பகுதியில் அமைந்துள்ள துா்க்கையம்மன் கோயிலில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
துா்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. விஜயதசமியையொட்டி, சுவாமிக்கு பத்ரகாளி அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
மேலும், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சரவணன், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அனைவரையும் கோயில் நிா்வாகிகள் பொன்னி பாலாஜி, சேகா் ஆகியோா் வரவேற்றனா்.