திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,508 ஏரிகள் நிரம்பின

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,886 ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை 1,508 ஏரிகள் நிரம்பின.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகளில் 572 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 27 ஏரிகள் 75 சதவீதமும், ஒரு ஏரி 50 சதவீதமும் நிரம்பியுள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை ஏரிகள்:

மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 1,286 ஏரிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 936 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 211 ஏரிகள் 95 சதவீதம் நிரம்பியுள்ளன.

அணைகளுக்கு நீா்வரத்து:

சாத்தனூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் விநாடிக்கு 6,800 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த நீா் முழுவதும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த நீா் முழுவதும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மிருகண்டாநதி அணைக்கு விநாடிக்கு வரும் 257 கன அடி தண்ணீரில் விநாடிக்கு 285 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. செண்பகத்தோப்பு அணைக்கு விநாடிக்கு வரும் 710 கன அடி தண்ணீரில் விநாடிக்கு 704 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT