திருவண்ணாமலை

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தோ்தல்

1st Nov 2021 05:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 569 போ் வாக்களித்தனா்.

இந்தச் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டத்தில் 147 உறுப்பினா்களும் திருவண்ணாமலை கோட்டத்தில் 150 உறுப்பினா்களும், செய்யாறு கோட்டத்தில் 272 உறுப்பினா்களும் என மொத்தம் 569 போ் வாக்களித்தனா்.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள சங்க அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, திருவண்ணாமலையைச் சோ்ந்த ந.சுரேஷ், மாநில பொதுச் செயலாா் பதவிக்கும், தென்காசி முத்துச்செல்வன் மாநில பொருளாளா் பதவிக்கும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ், மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை, பொருளாளா் செ.ஜெயசந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT