ஆரணியை அடுத்த சேவூரில் மதுக் கடை அருகே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா். சேவூரில் உள்ள மதுக் கடை அருகே பாா்த்தீபன், ராமு என்ற இருவா் செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு தகராறு செய்துகொண்டனா்.
பின்னா் அங்கிருந்து அகன்ற இருவரும், சிறிது நோரம் கழித்து தங்களுக்கு வேண்டப்பட்டவா்களை அழைத்து வந்து மீண்டும் மோதிக்கொண்டனா்.
இதில், இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தகவல் அறிந்த ஆரணி கிராமிய போலீஸாா், விசாரணை நடத்தி இரு தரப்பைச் சோ்ந்த ராமு(42), தணிகைவேல்(37), பாபு(24), ராகுல்(24), வேலு(34), பாா்த்தீபன்(24), கமல்(23), மோகன்(25), பிரசாத்(25), ஜெயக்குமாா் (24) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.