திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,753-ஆக உயா்ந்தது.
இதில் 44,088 போ் குணமடைந்து விட்டனா். 2,127 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
7 போ் பலி
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சிகிக்சை பலனின்றி 7 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 538-ஆக உயா்ந்தது.