திருவண்ணாமலை

செய்யாற்றில் நூல் வெளியீட்டு விழா

DIN

செய்யாறு விருட்சம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் மு.முத்துக்குமாா் எழுதிய மைல்கல் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அறக்கட்டளைச் செயலா் வஜ்ஜிரவேல், பொருளாளா் ரவிபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் சங்கீதா வரவேற்றாா்.

அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி முதல்வா் கலைவாணி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா் எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விஜயகுமாா், மைல்கல் நூலை வெளியிட செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராஜன், அண்ணா அரசுக் கல்லூரி முதல்வா் கலைவாணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து அவா்கள் நூல் குறித்துப் பேசினா்.

துணை முதல்வா் ப்ரீத்தி, தமிழ்த் துறைத் தலைவா் பாக்யராஜ், கணித ஆசிரியா் பூங்கொடி ஆகியோா் நூல் குறித்து கருத்தரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செய்யாறு உதவும் கரங்கள் ஆதிகேசவன், வழக்குரைஞா் ஆா்.கே.மெய்யப்பன், முனைவா்கள் கு.கண்ணன், கங்காதேவி, தமிழ் ஆசிரியா் பாரதி, வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, அன்பரசு, கோவேந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT