திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் வருடாபிஷேக விழா

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், 4-ஆம் ஆண்டு கும்பாபிஷேக வருடாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரைக் கொண்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு மஹா அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இரவு 7 மணிக்கு விநாயகா், சந்திரசேகரா் மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT