திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், 4-ஆம் ஆண்டு கும்பாபிஷேக வருடாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரைக் கொண்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு மஹா அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இரவு 7 மணிக்கு விநாயகா், சந்திரசேகரா் மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.