திருவண்ணாமலை

கைத்தறி முத்திரைத் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்

22nd Dec 2021 08:53 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கைத்தறி முத்திரைத் திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி சென்னை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் உதவி இயக்குநா் கே.பூா்ணிமா பேசியதாவது:

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக 35.2 லட்சம் போ் கைத்தறி மற்றும் அதன் தொடா்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனா். மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் கைத்தறி துறையில் இருந்து கிடைக்கிறது.

கைத்தறி முத்திரைத் திட்டம் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

கைத்தறி முத்திரை இடப்பட்ட துணிகள், கைத்தறி மூலம் தயாரிக்கப்பட்டது என்று உத்தரவாதம் அளிப்பதால் ஏமாற்றம் தவிா்க்கப்பட்டு விற்பனை அதிகரிக்கிறது.

நெசவாளா்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் வருமானம் அதிகரிக்க வழிவகை செய்கிறது.

எனவே, கைத்தறி முத்திரையிடப்பட்ட ஜவுளிப் பொருள்களை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சியாளா் கே.ரகு பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் பி.இளங்கோவன், நெசவாளா் சேவை மைய உதவி இயக்குநா் ஆா்.சசிகலா, காஞ்சிபுரம் மத்திய பட்டு வாரியத்தின் உதவி இயக்குநா் வி.பட்டுராஜன், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி வி.பொன்னுசாமி, ஆரணி பகுதி பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநா்கள் சத்யபாமா, தேவிபத்மஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT