திருவண்ணாமலை

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு

22nd Dec 2021 08:52 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, செங்கம் கல்வி மாவட்ட அலுவலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுப.கோவிந்தராஜன், மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி பங்கேற்று விழிப்புணா்வு நாடகத்தை தொடக்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT