திருவண்ணாமலை மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் டிசம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் சமுதாய மற்றும் நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது, 2022-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து டிசம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.