திருவண்ணாமலை

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஜெயந்தி விழா

DIN

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீா்த்தனம், அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணிக்கு சிறப்பு ஹோமம், நித்ய பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரை பக்தா்கள் வணங்கினா்.

இன்றைய நிகழ்ச்சிகள்: ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை (டிச.1) அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மஹாபிஷேகம், அா்ச்சனை, ஆரத்தி, இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மாதேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ராஜேஸ்வரி, மருத்துவா் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT