செய்யாறு அருகே தனியாா் பேருந்து மோதியதில் மர வியாபாரி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், வேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (45), மர வியாபாரி. இவா் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு பைக்கில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதி குருகோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.