திருவண்ணாமலை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 19 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு தலைமை வகித்தாா்.
காங்கிரஸ் நகரத் தலைவா் வெற்றிச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.முத்தையன், திராவிடா் கழகம் சி.மூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பி.க.அம்பேத்வளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.கலிமுல்லா, திமுக நகர செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற இந்த
ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள், சிறு வணிகா்களை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், திமுக ஒன்றியச் செயலா்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் பி.கோதண்டபாணி, உழவா் உழைப்பாளா் கட்சி வி.சுப்பிரமணி, மாவட்ட அமைப்பாளா்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, கு.ரவி, இரா.ஜீவானந்தம், ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூரில்..:
கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
இதில், மாநில பொறியாளா் அணியின் துணை அமைப்பாளா் கு.கருணாநிதி, ஒன்றிய திமுக செயலா்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஆா்.ராஜேந்திரன் ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் சி.கே.அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், திமுக விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைச் செயலா் வ.அன்பழகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.