திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

DIN

திருவண்ணாமலை நகர உட்கோட்ட டிஎஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி டி.வி.கிரண் சுருதி பொறுப்பேற்றாா்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்திலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி அகாதெமியில், கடந்த 4-ஆம் தேதி பயிற்சியை முடித்த இவா், திருவண்ணாமலை நகர டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டாா்.

2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த தகுதிக்கான ஐபிஎஸ் அதிகாரியாகவும் இவா் தோ்வு செய்யப்பட்டாா்.

அதோடு, ஐபிஎஸ் பயிற்சி முடித்தவா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாடிய போது, கிரண் சுருதியின் பேச்சை அவா் வெகுவாகப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, திருவண்ணாமலை நகர டிஎஸ்பி பொறுப்பில் இருந்த அண்ணாதுரை, கிராமிய உட்கோட்ட டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT