திருவண்ணாமலை

சாலை விபத்தில் அரசுப் பொறியாளா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பலியானாா்.

கலசப்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வெம்பாக்கம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த மாதவன் மகன் தணிகைவேல் (30) உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், தணிகைவேல் பணிநிமித்தமாக சனிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் கலசப்பாக்கத்திலிருந்து ஆதமங்கலம்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

கடலாடியை அடுத்த சிறுவள்ளூா் கிராம ஏரிக்கரைப் பகுதியில் செல்லும் போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முற்பட்டாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த இவா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT