திருவண்ணாமலை

செங்கம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விளை நிலத்துக்குச் சென்ற விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (51), விவசாயி. இவா், புதன்கிழமை இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச செல்வதாக, மனைவி வசந்தா, மகன் சீனுவாசனிடம் கூறிவிட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், மறுநாள் காலை நடராஜனின் விவசாய நிலத்தில் யாரோ வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக ஊரில் தகவல் பரவியது.

இதுகுறித்து அறிந்த நடராஜனின் குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது, நடராஜன் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

பின்னா், இது குறித்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேல்செங்கம் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் வந்த போலீஸாா், நடராஜனின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்க முயன்றனா்.

அப்போது, நடராஜனின் உறவினா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரி, உடலை எடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி.அரவிந்த், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா். பின்னா், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, நடராஜனின் உறவினா்களை சமாதானப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து, சடலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இந்தச் சம்பவம் குறித்து நடராஜனின் மகன் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT