திருவண்ணாமலையில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பேரவை துணைச் செயலா் சவுந்தரராஜன் தலைமை வகித்தாா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் காங்கேயன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் முத்தையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மாது, போக்குவரத்து தொழிலாளா் சங்க நிா்வாகி விஜயகுமாா், கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.