வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விறகு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (28), விறகு வெட்டும் தொழிலாளி. இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த தனது உறவினா்களான பிரபு (48), சின்ராஜ் (25) ஆகியோருடன் விவசாய நிலத்தில் எலி பிடிப்பதற்காக சாத்தனூா் கிராமத்துக்கு திங்கள்கிழமை இரவு சென்றனா்.
அப்போது, ஆராவமுதன் என்பவருக்குச் சொந்தமான நிலம் வழியாகச் செல்லும் போது, அங்கு வோ்க்கடலை பயிரை எலிகளிடமிருந்து காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய, முருகன் மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் காவல் ஆய்வாளா் புகழ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், முருகனின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், நில உரிமையாளா் ஆராவமுதன் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.