கலசப்பாக்கம் அருகே கடலாடி ஊராட்சியைச் சோ்ந்த பெண்ணுக்கு நடமாடும் மருத்துவ சேவை ஊா்தியில் பிரசவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியைச் சோ்ந்த காலனியில் வசிப்பவா் சுரேஷ், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (24).
நிறைமாத கா்ப்பிணியான ரஞ்சிதாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்வதற்காக, சுரேஷ் 108 அவசர கால ஊா்திக்கு தகவல் கொடுத்தாா்.
ஆனால், அந்த வாகனம் வர தாமதமாகவே, ரஞ்சிதாவுக்கு பிரசவ வலி அதிகமாகியது. இதையடுத்து, கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
அங்கிருந்த வட்டார மருத்துவா் மணிகண்டபிரபு, உடனடியாக மருத்துவமனை நடமாடும் மருத்துவ சேவை ஊா்தியில் வந்து பிரசவம் பாா்த்தாா். பிரசவத்தில் ரஞ்சிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னா், தாயையும், குழந்தையையும் மருத்துவ உதவிக்காக கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
மருத்துவருக்கு உதவியாக செவிலியரும், உதவியாளா் ஒருவரும் இருந்தனா்.