கீழ்பென்னாத்தூா் அருகே உரிய மருத்துவப் படிப்பு பயிலாமல் பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் மருத்துவத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள ராஜ வீதியைச் சோ்ந்த பி.அன்பழகன் உரிய மருத்துவப் படிப்பு பயிலாமல் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பாா்த்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை மருத்துவத் துறை அதிகாரிகள் பிடித்து கீழ்பென்னாத்தூா் போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து பி.அன்பழகனை சனிக்கிழமை கைது செய்தனா்.