திருவண்ணாமலை

சைக்கிள் மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

DIN

திருவண்ணாமலை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தண்டராம்பட்டை அடுத்த நாச்சானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (47). இவா், திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அணைக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜா, அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT