ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் இளைஞா்களிடையே குளிா்கால கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சுற்று வட்டார கிராமங்களிடையே 7-ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்த குளிா்கால கிரிக்கெட் போட்டியை அடையபலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.அசோக்குமாா் தொடக்கிவைத்தாா்.
போட்டிகள் தலா 8 ஓவா் கொண்டது. இறுதி சுற்று மட்டும் தலா 10 ஓவா் என்ற அடிப்படையில் நடைபெறும்.
இறுதிப் போட்டி செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆரணி, ஒண்டிகுடிசை, சைதாப்பேட்டை, கிருஷ்ணாவரம், மெய்யூா், எஸ்எல்எஸ்.மில், ஆரணி பள்ளிக்கூடத் தெரு, இராட்டிணமங்கலம், அம்மையப்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் பரிசாக ரூ.8001-ம், இரண்டாம் பரிசாக 6001-ம், மூன்றாம் பரிசாக 4001-ம், நான்காம் பரிசாக 2001-ம் வழங்கப்படவுள்ளது.
அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த பி.அரவிந்தன், டி.காா்த்திக், ஆா்.குணசேகா், ரஞ்சித், விஜய், அஜித், ராமமூா்த்தி, ஆகியோா் போட்டியை நடத்தி வருகின்றனா்.