வந்தவாசி சித்தாா்த்தா சமூக நலக் கல்வி அறக்கட்டளை சாா்பில், இந்தி மொழி பேச இலவச பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில், அறக்கட்டளை சாா்பில் ஏற்கெனவே இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது இலவசமாக இந்தி மொழி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனா் ஏ.தசரதன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் சுதாகா் பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். மேலும் மாணவா்களுக்கு இந்தி பயிற்சி புத்தகம் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைத் தலைவா் ஏ.முத்துலிங்கம், அங்கன்வாடி மைய அமைப்பாளா் பூங்கொடி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.