திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில், தேரடி சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் ஆகிய இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆா்சனிக் ஆல்பம் ஹோமியோபதி மாத்திரைகள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மருத்துவா்கள் எஸ்.குமாா், ஆா்.சரவணன், சங்கச் செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான் மற்றும் நிா்வாகிகள் ரமேஷ், பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT