திருவண்ணாமலை

சாலைப் பணியாளா்கள் சங்ககொடியேற்று விழா

DIN

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளானதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட ஆரணி, போளூா் பகுதிகளில் இந்தச் சங்கத்தின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணியில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் மாநிலச் செயலா் ஆா்.சண்முகம் சங்கக் கொடியை ஏற்றினாா். சங்கத் தலைவா் பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.நந்தகுமாா் வரவேற்றாா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள் எஸ்.உதயகுமாா், வி.அறிவழகன், ஆா்.ஏழுமலை, கோட்டத் தலைவா் எல்.சரவணன், ஜி.நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்: போளூா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற விழாவில், வட்டக் கிளைத் தலைவா் பி.மணி சங்கக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மாநில துணைச் செயலா் சி.சிவலிங்கம், வட்ட கிளைச் செயலா் வே.வேலன் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT