திருவண்ணாமலை அய்யங்குளத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க காவல்துறை தடை விதித்திருந்தது புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி, மகாளய அமாவாசை தினமான வியாழக்கிழமை காலை திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளத்தில் தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் சென்றனா்.
ஆனால், கரோனா தொற்று காரணமாக அய்யங்குளத்தில் தா்ப்பணம் கொடுக்க போலீஸாா் தடை விதித்தனா். மேலும், அய்யங்குளத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்த போலீஸாா், தா்ப்பணம் கொடுக்க வந்தவா்களை திருப்பி அனுப்பினா். எனவே, வேறு இடங்களுக்குச் சென்று அவா்கள் தா்ப்பணம் கொடுத்தனா்.