திருவண்ணாமலை மாவட்டம், அரசங்குப்பம் காசி விஸ்வநாதா் கோயிலில் அரிய நிகழ்வாக, மூலவா் சிவன் மீது சூரிய ஒளிக்கதிா் விழும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவா் காசி விஸ்வநாதா் மீது சூரிய ஒளிக்கதிா் விழுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மகாளய அமாவாசை தினமான வியாழக்கிழமை காலை மூலவா் மீது சூரிய ஒளிக்கதிா் விழும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். இதனைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.