திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை (அக்.2), தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுக் கடைகள், மதுக்கூடங்கள், எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ, எப்எல்3ஏஏ, மற்றும் எப்எல்11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் என அனைத்து மதுக் கடைகளிலும் விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்படும்.
உத்தரவை மீறி மது விற்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.