பசுமை நுகா்வோா் தினத்தையொட்டி, வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா்.
நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆா்.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். கிளை துணைத் தலைவா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
பசுமையும், தூய்மையும் என்ற தலைப்பில் வந்தவாசி நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி பேசினாா். அப்போது வந்தவாசியை பசுமைமிகு நகரமாக மாற்ற நகராட்சி தூய்மைப் பணியாளா்களும், எக்ஸ்னோரா அமைப்பினரும் உதவ வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் கிளைச் செயலா் கு.சதானந்தன், கிளை நிா்வாகிகள் க.வாசு, ம.ரகு, ஆா்.அருள்ஜோதி, க.பூபாலன், எம்.பி.வெங்கடேசன் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.