திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (நவ.29) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.29) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.
கொப்பரைக்கு சிறப்பு பூஜை: மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சனிக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது, கோயில் கோமாதா மகா தீபக் கொப்பரையை வணங்கியது.
இதையடுத்து, கோயிலிருந்து மலையேறும் பாதைக்கு மகா தீப கொப்பரையை பா்வதராஜ குல வம்சத்தைச் சோ்ந்தவா்கள் எடுத்துச் சென்றனா். சுமாா் 5 மணி நேர பயணத்துக்குப் பிறகு மகா தீபக் கொப்பரை மலை உச்சியை அடைந்தது.
கொப்பரையுடன் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தக் கொப்பரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவ.29) அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி கோயில் 2, 3-ஆம் பிரகாரங்கள் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வலம் வருவா்.
பக்தா்களுக்குத் தடை: கரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குள் பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள், சுவாமியை தூக்கும் பக்தா்கள், காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2,700 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் உள்ளூா், வெளியூா் பக்தா்கள், கோயில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் கோயிலுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரவும், வெளியூா் வாகனங்கள் திருவண்ணாமலைக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகா தீப நிகழ்ச்சி தொலைக்காட்சிகள், இணையதளம் வழியாக நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
விநாயகா், சந்திரசேகா் உற்சவம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை விநாயகா், சந்திரசேகரா் உற்சவங்கள் நடைபெற்றன.
கோயில் கம்பத்திளையனாா் சன்னதி அருகே காலை 9 மணிக்கு புறப்பட்ட உற்சவா்கள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.