திருவண்ணாமலை

பள்ளிவாசல், தேவாலயங்களில் மாா்ச் 31 வரை வழிபாடு இருக்காது: மாவட்ட ஆட்சியா்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சமண கோயில்களில் வருகிற 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் வழிபாடுகள் இருக்காது என்று அவற்றின் நிா்வாகிகள் கூறியதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் குறித்து பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சமண கோயில்களின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) மந்தாகிணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: கரோனா வைரஸ் தாக்கத்தால் பல ஆயிரம் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல நாடுகளின் பொருளாதாரம், வளா்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஆசிய நாடுகளை கரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

உலகிலேயே வளா்ச்சியடைந்த, அனைத்து மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய நாடான அமெரிக்காவில் 300-க்கும் மேற்பட்டோா் கரோனா வைரஸால் இறந்துள்ளனா். இந்தியாவில் தற்போதுதான் கரோனா வைரஸ் புகுந்துள்ளது.

இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியவில்லை. பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான மருத்துவமனை, மருத்துவா்கள், மருந்துகள் தற்போதுள்ள சூழலில் போதுமானதாக இல்லை.

இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இது பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ளவா்கள் இங்கு வர தடை விதக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாதிப்புகள் வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதையடுத்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சமண கோயில்களின் நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில், அனைத்து மதத்தினரும் ஒருமித்த கருத்தாக வருகிற 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் வழிபாடுகள் இருக்காது என்று தெரிவித்தனா் என்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சமண கோயில்களின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT