திருவண்ணாமலை

தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

8th Jan 2020 01:20 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே மொபெட்டில் சென்ற பள்ளித் தலைமை ஆசிரியையிடம் இருந்து 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்தவா் தெய்வழகன் மனைவி வடிவழகி (49). இவா், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், வடிவழகி செவ்வாய்க்கிழமை காலை மொபெட்டில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையிலிருந்து சுண்ணாம்புமேடு கிராமம் நோக்கிச் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், வடிவழகி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT