திருவண்ணாமலை

முதியவா் மாயம்

2nd Jan 2020 12:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாயமான முதியவரை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை கல்குட்டை தா்கா தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (58). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த டிச.28-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து சண்முகம் மாயமானாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT