திருவண்ணாமலை

கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

2nd Jan 2020 12:53 AM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நல்லதே நடக்கும் சமூக அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் தலைமை வகித்தாா். கால்நடை ஆய்வாளா் வேலு, பள்ளிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அறக்கட்டளை துணைத் தலைவா் ரேகா வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசுகையில், மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமியின், திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனா். இதன்படி, நல்லதே நடக்கும் சமூக அறக்கட்டளையின் தலைவா் சாமி ஏற்பாட்டின்படி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த அறக்கட்டளை துணைத் தலைவா் ரேகாவுக்கு பாராட்டுகள் என்றாா்.

ADVERTISEMENT

மாவட்ட பொறுப்பாளா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT